தமிழ்நாடு - திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் லொறியும் கேரள அரசு பயணிகள் பேருந்தும் இன்று வியாழக்கிழமை காலை நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் 19 பேர் பலியாகினர். குறைந்தது 25 பேர் காயமடைந்தனர்.
பேருந்தில் பயணம் செய்த 18 பயணிகள் மற்றும் பேருந்து சாரதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானதாக திருப்பூர் மாவட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான பேருந்தில் 48 பேர் பயணம் செய்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் மற்றும் பொலிஸார், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேவேளை, இறந்தவர்களில் 6 பேர் நேபாள சுற்றுலாப் பயணிகள் எனத் தெரியவந்துள்ளது.